தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும் - இராமகிருஷ்ண பட்டாச்சாரியா
இந்திய மெய்யியல் ஆய்வு மரபில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘உலகாயதம் : பண்டை இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு’ என்ற வெளியீடு புதிய யுகத்தைத் தொடங்கி வைத்தது. ஆனால் இந்தியாவில் இருந்த கல்வித்துறை சார்ந்த சில புலமையாளர்களுக்கு 678 பக்கங்களைக் கொண்ட இந்த ஆங்கிலப் படைப்பின் பொருளடக்கத் தலைப்புகளின் வரிசையே திகைப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இருந்த சிந்தனை பற்றிய வரலாற்றியலாளர்களும், தொல்சீர் இலக்கியப் புலமை யாளர்களும் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இந்நூலை வரவேற்றனர். மிக நன்கறியப்பட்ட ‘சீனாவில் நாகரிகமும் அறிவியலும்’ என்ற பல்தொகுதி நூலின் ஆசிரியர் ஜோசப் நீதம் “உங்கள் நூல் என்னுடைய நூலகத்தில் உண்மையாகவே மதிப்புக்குரிய இடத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும். நாம் பண்டைய இந்திய, சீன நாகரிகங்களை ஆராய்ந்து சில ஒத்த முடிவுகளுக்கு வந்தடைந்திருப்பது மிக வியப்புக்குரிய உண்மை” என்று சட்டோபாத்தி யாயாவுக்கு எழுதினார். மூத்த பிரெஞ்சு இந்தியவியலாளர் லூயிஸ் ரெனோ “இந்த நூல் உயர்ந்த மதிப்புடையதாக இருக்கின்றது. இந்தியவியலாளர்கள், சமூகவியலாளர்கள் ஆகியோரால் ஆழ்ந்து கவனமாகக் கற்கப்பட வேண்டியது...